Monday, August 24, 2015

சுய முன்னேற்றம்



சுய முன்னேற்றம்-வேகமாகச் செல்வந்தர்கள் ஆவோம்.
1.செல்வம் என்பது பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பது அல்ல ,அது ஒரு மனோபாவம்,படைப்புச் சிந்தனை .ஒவ்வொரு மனிதனிடமும் பொதிந்துள்ள படைப்புச் சிந்தனை தான் செல்வம் ,சிந்தனையின் மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் அல்ல.மனித சமூகம் முழுவதும் எண்ணங்களால் கண்ணுக்குத் தெரியாத சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.ஒருவர் செய்யும் சிந்தனை இந்த சங்கிலி மூலமாக ,ஒருவர் மாற்றி ஒருவர் என்று கடந்து அணைவரையும் சென்றடைகின்றது.மற்றவர்களது மன உணர்வுகளை,சிந்தனைகளை யார் இயற்கையின் சங்கிலி தொடர் எண்ணங்களின் தொடர் அனைவரையும் சென்று நிறைவு பெறா வண்ணம் பிடித்து வைத்திருக்கின்றார்களோ அவர்கள் தான் செல்வந்தர்கள் என்று தற்போதைய காலங்களில் நம்மால் உணரப்படுகின்றார்கள்.இந்த அளவு கோல் எப்போது எப்படி மாறும்?

2.செல்வம் பற்றிய மனோபாவம் இயற்கை ஆற்றலில் இருந்தும் இயற்கையின் படைப்புக்களில் இருந்தும் இடையறாது வழிந்தோடிக் கொண்டேயிருக்கின்றது.நான் சிறுவனாக இருந்த போது யார் விளையாடுவதற்கு நிறையத் தீப்பெட்டிப் படங்களை வைத்திருக்கின்றார்களோ,யார் சைக்கிள் டயரை உருட்டாமல் சைக்கிளின் ரிம்மை உருட்டுகின்றார்களோ ,யார் வித்தியாசமான கோலிக் குண்டுகள் இல்லாமல் பால்ரஸை வைத்து விளையாடுகின்றார்களோ ,யார் நிறைய பொன்வண்டுகளை வைத்து விளையாடுகின்றார்களோ அவர்கள் தான் பணக்காரர்கள்.நுங்கு வண்டியை உருட்டிக் கொண்டிருப்பவன் பரம ஏழை.இப்படித்தான் பணக்காரச் சிந்தனை உணரப்பட்டிருந்தது.
3.வயது ஆக ஆக நமது வாழ்க்கையில் தீப்பெட்டிப் படங்களும் கோலிக் குன்டுகளும் இருந்த இடங்களை மற்ற பொருட்கள் ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன.பொருட்கள் தான் மாறுகின்றதே ஒழிய செல்வம் பற்றிய சிந்தனைகளின் தாக்கம் அப்படியே தான் . உலகில் மனிதனின் சங்கிலித் தொடர் சிந்தனைகளில் சில சிந்தனைகளை அப்படியே மற்றவர்களுக்குத் தொடர விடாமல் ,அதாவது மற்ற மனிதர்களுடைய மனங்களில் தொடர்புகளை ஏற்படுத்த விடாமல் ,அடைத்து வைத்தல் தான் செல்வத்திற்கு அதிபதியாதல் எனலாம்.
4.அதனால் தான் செல்வம் என்பது ஒரு இடத்தில் நில்லாமல் செல்லக் கூடியது என்று பொருள்பட செல்வம் என்றழைக்கப்பட்டது.இந்த சங்கிலித்தொடர் உணர்வுகளில் நாம் நமது மறித்தல் சிந்தனைகளை மட்டும் சங்கிலித்தொடர் உறவில் வெளிப்படுத்தியும் ,மற்றவர்களின் உழைப்பு என்னும் சிந்தனையை மறித்து நமக்குள் ஐக்கியப்படுத்தியும் இருந்தால் நாம் செல்வந்தர் தான்.இப்படிப்பட்ட நமது செயல்கள் மூலம் பொருட்களையும் சேமித்து வருகின்றோம்.
5.நமது செல்வம் பற்றிய உணர்வுகளை வளப்படுத்த மற்றவர்களிடம் இருந்து வரும் செல்வம் பற்றிய சிந்தனைகளை நாம் வழிமறித்து அதனைப் பெற்றுக் கொண்டும் , மற்றவர்களுக்குஅதனைக் கடத்தாமல் அதற்கு மாறாக நமது செல்வம் சேர்க்கும் சிந்தனைகளைக் கடத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தால் நாம் செல்வந்தர்கள் தான்.ஆனால் இது இயற்கையின் விதிகளுக்கு முரண் ஆனது இயற்கை எதையும் இயக்கத்தோடும் ஒன்றை ஒன்று எல்லாவிதத்திலும் தொடர்போடும் தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.
6.ஒரு மனதில் ஏற்படும் இயக்கமோ சிந்தனையோ எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றும் ,அந்த இயக்கத்தின் வெளிப்பாடு எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் இயற்கை மனிதர்களையும் மற்றவற்றையும் ஏன் தன்னையும் கூட இந்தக் கண்ணுக்குத் தெரியாத தன்னுடைய பிணைத்தல் சங்கிலிகளால் இணைத்து வைத்துள்ளது .இதனை உணராமல் நாம் மற்றவர்களுடன் மனத் தொடர்புடன் இணைக்க வேண்டிய செல்வம் பற்றிய எண்ணங்களை இணைக்காமல் தடைப் படுத்துவது என்பது மனிதர்களின் பார்வைக்கு செல்வந்தர்கள் என்று காட்டலாம் ஆனால் இயற்கையின் பார்வையில் அப்படி அல்ல.
7.இப்படிப்பட்ட இயற்கையின் விதி மீறல்களான சங்கிலித் தொடர் செல்வ சிந்தனைகளை மறித்தல்கள் மூலமாக மனிதனால் ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன.ஆனால் இயற்கையின் விதியை மீறுதல் என்பது யாராலும் முடியாதது எந்த ஒரு மனிதனும் இப்படிப்பட்ட சங்கிலித் தொடர் மறிப்புகளை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியாது.அது ஒரு நாள்மனிதன் விட்டு மனிதன் மாறியே தீரும் செல்வம் என்னும் சிந்தனை ஒரு மனிதனின் மனதின் மறிப்புகளில் இருந்து இன்னொரு மனிதனுக்கு மாறிச் செல்லும்.
8.மனித இனத்தின் இந்த மறித்தல்கள் இயற்கையின் படைப்புகளில் தொடங்கி இயற்கையின் படைப்பினிலேயே முடிக்கப்படுகின்றது.இப்படிப்பட்ட செல்வ சிந்தனைகளின் மறிப்பானது மனிதனின் மனதில் சிந்தனையாகத் தோன்றி தங்கத்தில் முடிவடைகின்றது.மனிதனது இந்த மறித்தல்கள் முடிவடையும் சிந்தனையாக தங்கம் உள்ளது. செல்வச் சிந்தனையானது கோலிக் குண்டில் தொடங்கி தங்கத்தில் முடிக்கப்படுகின்றது.அதனால் தான் தங்கம் என்பது எளிதில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய எல்லோரும் எளிதில் அடையமுடியாத சிந்தனையாகவும் பொருளாகவும் உள்ளது.
9.தங்கம் என்பது எளிதில் விளையும் ஒரு பொருளாக மனித இனத்தால் ஆக்கப்படும் வரை.அப்படி ஆக்கப்படும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.அதன் பின்பு இந்த சங்கிலி மறித்தல்கள் என்னும் தடையில் இருந்து மனித இனம் உறுதியாக வெளியேறி .இயற்கையின் விருப்பமான எண்ணங்களைப் படைத்து அதனை சங்கிலித் தொடர் மூலமாக அணைவரும் பெறும்படியாக மாறும்.அப்போது மனிதனின் சிந்தனைகள் மட்டுமே செல்வமாக மதிப்பிடப்படும் காலம் வரும்.அப்போதும் கூட இந்த சங்கிலி மறித்தல்கள் இல்லாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது.




" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?).

நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2.
உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3.
அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4.
அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5.
தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6.
நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7.
உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8.
உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9.
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10.
உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11.
எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12.
தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13.
புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15.
எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16.
நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17.
உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18.
உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19.
அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20.
நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.


- மரபின் மைந்தன் ம. முத்தையா
ராபின் ஷர்மா
கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. பட்ங் ம்ர்ய்ந் ஜ்ட்ர் ள்ர்ப்க் ட்ண்ள் ச்ங்ழ்ழ்ஹழ்ண் என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்.
குறுகிய காலத்தில் வளர்ந்து வளம் பெறத் தொடங்கினாலும், வாழ்வில் மனநிறைவு கிடைக்கவில்லை. வெளியே பார்க்காதே. உள்ளே பார்என்று உள்ளே கேட்ட குரலை மதித்ததால் ராபின் ஷர்மா உள்ளே பார்க்கத் தொடங்கினார்.
ராபின் ஷர்மா தன் முதல் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது தான் உலகத்தை ஈர்க்கப் போவதாக நம்பினாரோ என்னவோ? ஆனால், அவர் சொந்தமாக அச்சடித்த 2000 பிரதிகளும், அவர் வீட்டு சமையலறையை ஆக்கிரமித்துக் கொண்டது.
சுலபத்தவணையில் இல்லாமல் சிரமத் தவணையில் மெல்லமெல்ல விற்பனையாகத் தொடங்கியது.
அதேபோல, அவர் நிகழ்த்திய முதல் பயிலரங்கில், பங்கேற்பாளர்களாக முதலில் கலந்து கொண்டவர்கள் 23 பேர்கள். அதில் 21பேர்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.
இரண்டாவது புத்தகத்தையும் அவர்தான் கொண்டு வந்தார். அதுவும் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஹேர்பர் கோலின்ஸ் நிறுவனத்தின் தலைவர் எட் கார்ஸன், ராபின் ஷர்மாவை புத்தகக்கடையில் சந்தித்தார். அந்த சந்திப்பு அத்தனையையும் மாற்றியது. இன்று அவருடைய புத்தகங்கள், 90 நாடுகளில் 60 மொழிகளில் வெளி யாகின்றன.
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்களில் பலரும் கவிதைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், ராபின்ஷர்மா கவிதைகளைப் பெரிதும் படிப்பவர் மட்டுமல்ல. பரிந்துரை செய்பவரும் கூட!!
வாழ்வியல் ஞானத்தை ஒற்றைக் கவிதையில்கூட கண்டுகொள்ள முடியும் என்பது ராபின்ஷர்மாவின் நம்பிக்கை. கானடா நாட்டில் பிறந்து வளர்ந்த போதும், இந்தியக்குடும்பங்களின் இயல்புப்படி, பல நீதிக் கதைகளை ராபின் ஷர்மாவுக்கு குழந்தைப் பருவத்தில் கூறியிருந்தார்கள். இவற்றின் புதிய பரிமாணங்களையே அவர் தன் உரைகளில் புகுத்தி வருகிறார்.
ராபின் ஷர்மாவின் இந்திய விருப்பங்களில் இணையில்லாதது இமயமலை. அந்த மலையின் ஆன்தீக அதிர்வுகளுக்காக அதனை மிக முக்கியமாகக் கருதும் ராபின்ஷர்மா, இன்னொரு சுவாரசியமான கோணத்திலும் இமயமலை பற்றிச் சொல்கிறார்.
வாழ்க்கை என்பதே மலையேற்றம் அல்லாமல் வேறென்ன? ஞானத்தை நோக்கிய பயணத்தை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே உச்சியை விட்டுக் கண்கள் அகலாமல் உற்சாகமாக நடைபோடுவதற்குப் பெயர்தான் வாழ்க்கை.
குறிக்கோள் நோக்கி உந்தித்தள்ளும் உற்சாகத்தை எழுத்திலும் பேச்சிலும் நிறைத்துக் கொடுக்கும் ராபின்ஷர்மா மேற்கோள்களின் மேதையும்கூட. அவர் அள்ளித்தரும் மேற் கோள்களின் அளவு அசாத்தியமானது. பல அறிஞர்களின் படிப்பறிவிலும் பட்டறிவிலும் பூத்த சிந்தனைகள் வாழ்வின் பொதுவான அம்சங்கள்மீது வெளிச்சம் போடுபவை என்பது ராபின்ஷர்மாவின் நம்பிக்கை.
கீழைநாடுகளின் தத்துவப்பார்வையும் மேலைநாடுகளின் முன்னேற்றச்சிந்தனையும் சங்கமிக்கும் கோட்பாடுகள் ராபின்ஷர்மாவின் தனித் தன்மை.
அவரது சிந்தனைகளில் வெளிச்சமிடும் வீச்சுக்கு இந்தக் கலவையே காரணம்.
பெரும்பாலான மனிதர்கள், தங்கள் வாழ்வின் மிகச்சிறிய பகுதியையே தீவிரத்துடன் வாழ்ந்ததாய் பின்னாளில் வருத்தம் கொள்கிறார்கள். முழு வாழ்வையும் தீவிரத்துடன் வாழ்வதே முன்னேற்றத் துக்கான பணி”.
உங்கள் ஒற்றை நாள் வாழ்க்கை என்பதே உங்கள் மொத்த வாழ்வின் ஒருநாள் சுருக்கம்தான். எனவே ஒவ்வொரு நாளையும் முழுமையாய் வாழுங்கள்”.
வலிகளே வாழ்வின் மிக முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகின்றன”.
அச்சம் என்பது வளர்வதற்காக வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளில் ஒன்று. உங்களை அச்சத்திற்குள்ளாக்கும் விஷயங்களை ஆவலுடன் எதிர்கொள்ளுங்கள்.
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது, தலைமைப் பண்புள்ளவர்களை வேகமாக வளர்த் தெடுப்பதில் இருக்கிறது”.
மனிதர்கள் பாராட்டுக்களை விரும்பு கிறார்கள். தங்கள் பெருமையை பிறர் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்”.
நாம் நம் செயல்களையும் பணிகளையும் கொண்டாட வேண்டும். செயல்கள் நமக்குப் பெருமையும் குதூகலமும் தரவேண்டும். பணி புரிகிற இடம், குதூகலம் மிக்கதாய் ஆகிற போது தான், மனிதர்கள் தங்கள் தலைசிறந்த திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகளே உங்கள் நாளைகளைத் தீர்மானிக்கின்றன”.
நம் சின்னச்சின்ன பங்களிப்புகளே நம் வாழ்வின் தரத்தையும் அர்த்தத்தையும் தீர்மானிக்கின்றன”.
தோல்விகள், நம்மை மேம்படுத்துகின்றன. வெற்றிக்கான தேசிய நெடுஞ்சாலைகளே தோல்விகள்.
நம்மில் உள்ள குழந்தைத்தனத்தை மீட்டெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள் உங்களில் இருக்கும் குழந்தை, வளர்ந்திருக்கும் உங்களை என்னவென்று நினைக்கும் என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்”.
இப்படி எத்தனையோ மேற்கோள்களால் வாழ்வின் குறிக்கோளை எட்ட வழியமைத்துத் தரும் ராபின் ஷர்மா, இந்தியாவின் பாரம்பரியப் பார்வையின் அடிப்படையில் புத்தம் புதிய சிந்தனைகளைப் பதியன் போடுகிறார்.